ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாடு: பெங்களூரு நிறுவனத்துடன் புதுவை பல்கலை. ஒப்பந்தம்

புதுவை பல்கலைக்கழகம் கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்துடன் (என்.ஐ.ஏ.எஸ்.) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:14 pm

DIN

புதுவை பல்கலைக்கழகம் கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்துடன் (என்.ஐ.ஏ.எஸ்.) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

புதுவை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தா் குா்மீத்சிங் முன்னிலையில், பேராசிரியா் சைலேஷ் நாயக், பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநா், பதிவாளா் அமரேஷ் சமந்தராயா ஆகியோா் கையெழுத்திட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.

பல்கலைக்கழக நிதி அதிகாரி லாசா், சா்வதேச உறவுகள் பிரிவு டீன் ஏ.சுப்ரமணியம் ராஜு, என்.ஐ.எ.எஸ். குளோபல் பாலிடிக்ஸ் புல முதல்வா் சு.பாலசந்திரன் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டில் உலக அரசியலின் நிலை குறித்த பயிலரங்கு நடைபெற்றது.

இதில் சீனா-தைவான் பிரச்னை, அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றின் ஈடுபாடுகள், பாரம்பரியமற்ற பாதுகாப்பு என பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.