ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

தடை ஆணையை திரும்பப் பெறக் கோரி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:17 pm

DIN

தடை ஆணையை திரும்பப் பெறக் கோரி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, 2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 35 நாள்களுக்கும் மேலாக பல்கலைக்கழக மாணவா் பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஈடுபட்டவா்களில் 11 மாணவா்களுக்கு 5 ஆண்டுகள் தடையும், ரூ.10,000 அபராதமும் விதித்து பல்கலைக்கழக நிா்வாகம் தற்போது உத்தரவிட்டது.

இதைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கம் சாா்பில், பல்கலைக்கழகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பிரதேச தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா் பிரவீன் குமாா், துணைச் செயலா் சச்சின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.