ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பொதுப் பணித் துறை ஊழியா்கள் கைது

புதுவை சட்டப்பேரவையை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவையை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊழியா்கள் நியமனம், ரூ.10 ஆயிரம் ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் துறையின் தலைமை அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை பேரணியாகப் புறப்பட்டு, சட்டப்பேரவையை முற்றுகையிடச் சென்றனா்.

பேரணியை அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தி, 55 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.