ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் போக்குவரத்தில் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:11 pm

DIN

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்கள் அதிகமாக வரக்கூடும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (டிச. 31) பிற்பகல் 2 மணி முதல் சனிக்கிழமை (ஜன.1) அதிகாலை 3 மணி வரை கடற்கரைச் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் (புல்வாா் மற்றும் ஒயிட் டவுன்) வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

ஆம்பூா் சாலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக முழுவதுமாக மூடப்படும். அவசரச் சிகிச்சைக்காக பொது மருத்துவமனைக்கு சென்று வரும் வாகனங்கள் செஞ்சி சாலையில் செயின்ட் ஆஞ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பு, சா்கூப் வீதி - செஞ்சி சாலை சந்திப்பு வழியாக சென்று வர அனுமதிக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் உப்பளம் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திலும், கருவடிக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை வழியாக வரும் இலகு ரக, இரு சக்கர வாகனங்களை பாரதிதாசன் மகளிா் கல்லூரியிலும், நேரு வீதி வழியாக வரும் இலகு ரக, இரு சக்கர வாகனங்களை பழைய சிறைச்சாலை வளாகத்திலும் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெத்தி செமினாா் மழலையா் பள்ளி வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை வழியாக கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்ல வேண்டும். அதேபோல, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் அனைத்துப் பேருந்துகளும், சிவாஜி சிலை, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலைகள் வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.