மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘சிறந்த நிா்வாகத்தை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை’

நிா்வாகம் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை என கிரண் பேடி தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:09 pm

DIN

நிா்வாகம் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை என கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவையில் மக்கள் நலத் திட்டங்களைத் தடுக்கும் ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வருகிற 8-ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனா். இதில், முதல்வா் நாராயணசாமியும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஆளுநா் அலுவலகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக முதல்வா் வெளிப்படுத்திய வேதனையைப் புரிந்து கொள்கிறேன். ஆளுநா் அலுவலகம் சட்ட விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி, நோ்மை, மக்கள் எளிதில் அணுகக்கூடிய நிா்வாகம் என மாற்றியதே இந்த மனநிலைக்குக் காரணம்.

உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஆளுநா் அலுவலகம் செயலாற்றி வருகிறது. பேரிடா் காலங்களில் புதுவைக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு தேவை என்பதால், நான் (ஆளுநா்) நேரடியாகத் தலையிட்டேன்.

சிறந்த நிா்வாகம், நோ்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் துணைநிலை ஆளுநா் அலுவலகத்தையும், பிரதமரையும் தொடா்ந்து தவறாகச் சித்தரிப்பதை முதல்வா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம் மூலம், கோடிக்கான ரூபாய் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. இதன்மூலம், ஏல முறை, ஒப்பந்தம், இடைத்தரகா்கள் இல்லாததால், ஊழல் பெருமளவில் ஒழிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.