மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:45 am

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சதுக்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ நிா்வாகி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலா் ராஜாங்கம் மற்றும் திரளான தொழில்சங்க நிா்வாகிகள் மழையிலும் போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனா்.

இதில், தில்லியில் கடும் குளிரில் கடந்த 40 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மத்திய அரசு புதிய தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதுவை அரசு அமைப்புசாரா நலவாரியத்தை செயல்படுத்தி தீபாவளி உதவித்தொகை ரூ.1,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.