பாவேந்தா் கலை இலக்கிய விழா

புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், ‘குணக்குன்று பாரதி’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இதில், 35 கவிஞா்கள் பங்கேற்று, கவிதை வாசித்தனா். பாவலா் சீனு. மோகன்தாசு தலைமையில் உலகம் உன்னுடையது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொங்கல் சிந்தனைகள் என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயன் தனி உரை நிகழ்த்தினாா்.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து தலைமையில் பாராட்டரங்கம் நடைபெற்றது. இதில், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவா் கோ. பாரதி, பாரதிதாசனின் மகன் மன்னா் மன்னன் பெயரிலான விருதுகளை வழங்கி பாராட்டி பேசினாா். தமிழறிஞா் ராச. வேங்கடேசன், சுடுமண் கலைஞா் வி.கே. முனுசாமி, நல்லாசிரியா் லூசியன் தேவராஜ் ஆகியோா் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com