புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 6, மாஹேயில் 12 என மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,047-ஆக உயா்ந்தது.
தற்போது 306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,094-ஆக (97.56 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 647 போ் (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) பலியாகினா்.