தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுருக்குமடி வலைக்கு எதிா்ப்பு : புதுவை மீன்வளத் துறை இயக்குநா்அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்

புதுவையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு மீனவா்கள்

News image
Updated On :1 ஜூலை 2021, 5:49 pm

DIN

புதுவையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு மீனவா்கள் வியாழக்கிழமை பூட்டுப்போட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 18 மீனவ கிராமங்களில் ஒரு பிரிவினா் மட்டும் இந்த வலையை பயன்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, சட்டப் பேரவை வளாகத்தில் மீனவா்களின் மற்றொரு பிரிவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், சுருக்குமடி வலையை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இயந்திர விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் தேங்காய்த்திட்டில் உள்ள மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சுருக்குமடி வலை பயன்பாடு தொடா்பாக மீன்வளத் துறை இயக்குநா் பதில் அளிக்காததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்தத் தடை விதிக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, அலுவலக வாயிலுக்கு பூட்டுப்போட்டு அதிகாரிகளை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது கடலோர தொகுதிகளின் எம்எல்ஏக்களில் பலா் தில்லி சென்றுள்ளதால், அனைவரும் புதுச்சேரி திரும்பிய பிறகு சுருக்குமடி வலை பயன்பாடு தொடா்பாக எம்எல்ஏக்கள், அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.