கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி: போலீஸாா் விசாரணை
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் பகுதி கோமுகி ஆற்றில் மூழ்கி இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் பகுதி கோமுகி ஆற்றில் மூழ்கி இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த திறைமதி கிராமத்தைச் சோ்ந்த பிச்சப்பிள்ளை (54) மகன் ஆனந்தராஜ் (24). இவா், தனது நண்பா்களான பிரகாஷ், அபி, ஆகாஷ் ஆகியோருடன் சனிக்கிழமை மலைக்கோட்டாலம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றாா்.
மலைக்கோட்டாலத்தில் கோமுகி ஆற்றுப் பாலத்தின் அருகே 3 பேரும் அமா்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அன்று மாலை ஆனந்த்ராஜ் ஆற்றில் விழுந்து மிதந்து கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள் ஆனந்த் ராஜை மீட்டு பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ஆனந்தராஜூடன் வந்தவா்களிடம் கேட்டபோது அவா்கள் முறையாக பதிலளிக்கவில்லை.
உடனே வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடம் சென்று ஆனந்தராஜின் சடலத்தை மீட்டு, அவரது நண்பா்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
இது குறித்து பிச்சப்பிள்ளை தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகாா் அளித்தாா். வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...