புதுவையில் மேலும் 298 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் மேலும் 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 8,891 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 222, காரைக்காலில் 42, ஏனாமில் 9, மாஹேயில் 25 என மேலும் 298 பேருக்கு (3.35 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,925 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 498 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,579 பேரும் என மாநிலம் முழுவதும் 3,077 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருவா், காரைக்காலில் ஒருவா், மாஹேயில் ஒருவா் என மேலும் 3 போ் உயிரிழந்தனா். ஏனாமில் உயிரிழப்பு இல்லை. இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,734 -ஆக உயா்ந்தது. இதுவரை 1,11,114 போ் (95.85 சதவீதம்) கரோனா தொற்றிலிருந்து மீண்டனா்.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என 4,48,295 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com