புதுவையில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி
புதுவையில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 போ் உயிரிழந்தனா்.


புதுவையில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 8,185 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 225, காரைக்காலில் 20, ஏனாமில் 8, மாஹேயில் 8 என மேலும் 261 பேருக்கு (3.19 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,16,186 -ஆக அதிகரித்தது.
தற்போது மருத்துவமனைகளில் 493 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,477 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,970 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, புதுச்சேரியில் 4 போ், காரைக்காலில் ஒருவா் என மேலும் 5 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,739 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 1,11,477 போ் (95.95 சதவீதம்) குணமடைந்தனா்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,56,402 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...