தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் நீட்டிப்பு

 புதுவையில் சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:27 pm

DIN

 புதுவையில் சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் டி. சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள சாராயம், கள்ளுக் கடைகளின் 2020-2021- ஆம் ஆண்டின் குத்தகை காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, 2021-2022- ஆம் ஆண்டுக்கான குத்தகை ஏலம் தொடங்க வேண்டும். வழக்கமாக ஜூன் மாதத்தில் இதற்கான ஏலம் நடைபெறும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், திட்டமிட்டதைப் போல, ஜூன் மாதம் ஏலத்தை நடத்த முடியவில்லை. எனவே, வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை தற்போதுள்ள குத்தகை காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.