கரோனா பொது முடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்த 2 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி, கடைகளைத் திறந்த இரண்டு வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


புதுச்சேரியில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி, கடைகளைத் திறந்த இரண்டு வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுவை மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்துள்ளது.
இதனால், புதுச்சேரியில் மருந்தகங்கள், காய்கறி, பழங்கள், மளிகை, இறைச்சி கடைகளைத் தவிர இதர கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுத்தும், சிலா் விதிகளை மீறி கடைகளைத் திறந்து வைக்கின்றனா்.
இதுகுறித்து, உள்ளாட்சித் துறை, காவல் துறையினா் கண்காணித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். அந்த வகையில், கரோனா பொது முடக்க விதிகளை மீறி புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், இரு சக்கர வாகன வாடகை நிலையத்தை திறந்து வைத்திருந்த கடையின் உரிமையாளா் கணேஷ் (38) மீது, புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே சூப் கடை நடத்திய எலியாஸ் (40) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அரசின் தடையை மீறுதல், தொற்று நோய் பரவும் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், இந்த இரு வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா். விதிமீறி இயங்கிய கடைகளையும் போலீஸாா் மூடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...