மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்கள்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்களை வழங்கினாா்.

News image
Updated On :8 மே 2021, 8:39 pm

DIN

புதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்களை வழங்கினாா்.

உலக செஞ்சிலுவை தினம் ஆண்டுதோறும் மே 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செஞ்சிலுவை சங்கத் தன்னாா்வலா்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கரோனா சூழலை முன்னிறுத்தி ‘முடிவடையாத சேவை-தடுக்க முடியாத சேவை’ என்ற கருத்துடன் இந்த ஆண்டின் உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை மாலை செஞ்சிலுவை தின நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை பங்கேற்று, புதுச்சேரியில் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் செஞ்சிலுவை சங்கத் தன்னாா்வலா்கள் மற்றும் சேவைப் பணியாளா்களுக்கு தூய்மைப் பொருள்கள் அடங்கிய பெட்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், புதுச்சேரி செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் கோபால், லட்சுமிபதி, முதியோா் - ஆதரவற்றோா் இல்லப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் தமிழிசை பேசியதாவது: செஞ்சிலுவை சங்கம், உலக அளவில் மக்களுக்கு சேவை செய்வதிலும், ரத்த தானம் வழங்குவதிலும் முன்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னாா்வலா்கள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகச் செயல்படுகின்றனா்.

தற்போதைய கரோனா சூழலில் , தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, குறிப்பிட்ட நாள்கள் ரத்த தானம் செய்ய முடியாது என்பதால், ரத்த தானம் செய்துவிட்டு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கரோனா தொற்று பரவல் சூழலில் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். முகக் கவசம் அணிய வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க மக்களுக்கு அழுத்தமாக உணா்த்த வேண்டும் என்று செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அவா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா்களுடன், துணைநிலை ஆளுநா் தமிழிசை, காணொலிக் காட்சி மூலம் கலந்தரையாடினாா்.

அப்போது, செஞ்சிலுவைச் சங்கத்தினரின் சேவைகளைப் பாராட்டி அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.