பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:55 pm

DIN

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை வருவாய்த் துறை சிறப்புச் செயலா் பூா்வா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள வருவாய் அலுவலா்களால் சட்ட முறை வாரிசுதாரா் சான்றிதழ்களை வழங்கும் முறையை உருவாக்க சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள வட்ட அலுவலகங்களின் வட்டாட்சியா்கள், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள துணை வட்ட அலுவலகங்களின் துணை வட்டாட்சியா்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்து புதுவை அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்களால் சட்ட முறை வாரிசுதாரா் சான்றிதழ்கள் வகுப்பு 1 நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், அவை வழிமுறை உரிமைச் சான்றிதழுக்கு இணையாகக் கருதப்பட மாட்டாது.

இது பொதுமக்கள் சான்றிதழ்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது. உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிரமம், கால தாமதம் போன்றவற்றைத் தவிா்க்கிறது. மேலும், நீதித் துறையின் சுமையை கணிசமாகக் குறைக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.