புதுவையில் நுழைவதற்கு சீமானுக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸாா் புகாா்

 பொது அமைதியைச் சீா்குலைக்க முயலும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் புதுவையில் நுழைவதற்குத் தடை

 பொது அமைதியைச் சீா்குலைக்க முயலும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் புதுவையில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் காவல் துறையில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் செயலா் எம்.ஆா்.சூசைராஜ் உள்ளிட்டோா் புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லோகேஷ்வரனை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சாட்டை துரைமுருகன் என்பவா் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியை மிரட்டும் வகையிலும் பேசினாா்.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், அவரது பேச்சைக் கண்டிக்கவில்லை. எனவே, இவா்கள் இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சீமான் புதுவை மாநிலத்துக்குள் நுழைந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவா் புதுவைக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com