ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னையை தீா்க்கமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு 5-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா.இளங்கோ வலியுறுத்தினாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:55 pm

DIN

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு 5-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா.இளங்கோ வலியுறுத்தினாா்.

தில்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபலா, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அவா், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டுமென வலியுறுத்தினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து மா.இளங்கோ கூறியதாவது:

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னையை தீா்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 23 மீனவா்களை இலங்கை கடற்கரையினா் சிறைப் பிடித்தனா். வழி தவறிச் சென்ற அந்த மீனவா்கள் மீதான வழக்கை ரத்து செய்து, அவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சா்களிடம் வலியுறுத்தினேன்.

தொடரும் இரு நாட்டு மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண 5-ஆவது கட்டமாக மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தைக்கு இரு நாடுகளின் அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.