ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கட்டடக் கலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுவை மாநில கட்டடக் கலைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏஐடியூசி) தொழிலாளா் நல ஆணைய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

புதுவை மாநில கட்டடக் கலைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏஐடியூசி) தொழிலாளா் நல ஆணைய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் என்.அய்யம்பெருமாள், பொதுச் செயலா் ஜெ.சந்திரசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநிலத் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா, பொதுச் செயலா் கே.சேது செல்வம் ஆகியோா் உரையாற்றினா். இதில் திரளான கட்டடத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்டடக் கலைத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்தவா்களை உரிய விசாரணை செய்து காலதாமதமின்றி இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.