ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி என்ற நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

 புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:55 pm

DIN

 புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை விடியோ பதிவு வாயிலாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்ற நிலையை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை. அதன் ஒரு அங்கமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை அரசு வருகிற 25-ஆம் தேதி நடத்துகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 2-ஆவது தவணை தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பெரிய தடுப்பு அரணாகும் எனத் தெரிவித்துள்ளாா் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.