ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை சட்டப்பேரவை அருகே மிஷன் வீதி மாதா ஆலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். அரசு ஊழியா்கள், அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உச்ச வரம்பை உயா்த்த வேண்டும். அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் 2 மாத ஊதியம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்ததை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.