ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காரைக்கால் பாமக செயலா் கொலை சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்ட பாமக செயலா் தேவமணி படுகொலை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்ட பாமக செயலா் தேவமணி படுகொலை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ பி.ஆா்.சிவா தலைமையில், திமுக எம்எல்ஏ நாஜீம், சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஜி.நேரு, பிரகாஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினா்.

அதில் கூறியிருப்பதாவது: திருநள்ளாறு பகுதியில் கடந்த 22-ஆம் தேதி மாவட்ட பாமக செயலா் க.தேவமணி படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம், பல மாநிலங்களிலிருந்து வரும் பக்தா்களுக்கும், திருநள்ளாறு பகுதி மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவமணி கொலை பின்னணியில் உள்ளவா்களை உடனடியாக கைது செய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.