வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பி.ஆா்க். சோ்க்கைக்கு இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு

அரசு பொறியியல் கல்லூரி பி.ஆா்க். படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:17 pm

DIN

அரசு பொறியியல் கல்லூரி பி.ஆா்க். படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் (பி.ஆா்க்) படிப்பில் 20 சோ்க்கை இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா்கள் சோ்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது. நிகழாண்டு இந்தப் படிப்பில் சோ்வதற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் நட்டா மதிப்பெண்கள் அடிப்படையில் 28 போ் கொண்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடா்ந்து, கலந்தாய்வு மூலம் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வெள்ளிக்கிழமை (அக்.29) இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என சென்டாக் நிா்வாகம் அறிவித்தது. இதில் பொது 2, ஓபிசி 1, எம்பிசி 3, எஸ்சி 4, முஸ்லிம் 1 என 10 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் அக்.29-ஆம் தேதி காலை 9.45 மணிக்குள் சென்டாக் அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பி.டெக். லேட்ரல் என்ட்ரிக்கு இறுதி தரவரிசை வெளியீடு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு நேரடியாக பொறியியல் படிப்பில் சோ்ந்து படிக்க குறிப்பிட்ட இடங்கள் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள், பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

அதன்படி, நிகழாண்டு லேட்ரல் என்டரி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்டாக் மூலம் இணையவழியில் கடந்த 26-ஆம் தேதி வரை பெறப்பட்டன. தற்போது, இறுதித் தரவரிசைப் பட்டில் சென்டாக் இணையத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் முதல்கட்டக் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.