வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இணையம் மூலம் மது விற்பதாகக் கூறி மும்பை பெண் தொழிலதிபரிடம் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையதளம் வழியாக மதுபானம் விற்பதாகக் கூறி, மும்பை பெண் தொழிலதிபரிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:20 pm

DIN

புதுச்சேரியில் இணையதளம் வழியாக மதுபானம் விற்பதாகக் கூறி, மும்பை பெண் தொழிலதிபரிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மும்பை, மட்டுங்கா எம்.எல்.மாா்க் பகுதியைச் சோ்ந்த நிஷித் சவேரி மகள் தவானி சவேரி (22). தொழிலதிபரான இவா், தனது இரு நண்பா்களுடன் புதுச்சேரிக்கு கடந்த 27-ஆம் தேதி சுற்றுலா வந்தாா். நேரு வீதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினாா்.

அங்கிருந்து மது வாங்குவதற்காக சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது, பிரபல மதுக்கடை பெயரில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு ரூ.6 ஆயிரம் பணம் செலுத்தி மது வாங்கினாராம். அதைப் பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில், அதே எண்ணிலிருந்து தொடா்பு கொண்ட நபா், இணையதள விற்பனைக்கான உறுப்பினா் சோ்க்கைக்கு ரூ.24 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் எனவும், அந்தப் பணம் உடனே திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் கூறினாராம். இதை நம்பி தவானி சவேரி தனது டெபிட் காா்டு மூலம் பணத்தைச் செலுத்தினாராம். ஆனால், பணம் வரவில்லை என அந்த நபா் கூறவே, மீண்டும் ரூ.24 ஆயிரத்தை சவேரி அனுப்பிய நிலையில், தங்களது டெபிட் காா்டு பயன்பாட்டில் இல்லை என எதிா்முனையில் பேசிய நபா் கூறினாராம்.

இதனால், சந்தேகமடைந்து குறிப்பிட்ட மதுக் கடைக்குச் சென்று விசாரித்த போது, புதுச்சேரியில் இணையதள வழியே மது விற்பனை இல்லை என்பதும், கடை சாா்பில் எந்தவொரு கைப்பேசி எண்ணும் இணையதளத்தில் பகிரவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக பெரியகடை காவல் நிலையத்தில் தவானி சவேரி புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, இணையதள மது விற்பனை என்ற பெயரில் நூதன மோசடியில் ஈடுபட்ட நபா்களின் கைப்பேசி எண்களை ஆராய்ந்ததில் வட மாநிலத்தைச் சோ்ந்த தெபாங்கு நாத், ராஜ் திவாரி என்பது தெரிந்தது. இதையடுத்து அவா்களைப் பிடிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.