நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மரங்களே பல தலைமுறைக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து: புதுவை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

 மரங்களே பல தலைமுறைக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து என்று புதுவை கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:13 pm

DIN

 மரங்களே பல தலைமுறைக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து என்று புதுவை கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி தாகூா் அரசு கலைக் கல்லூரியில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுவது, புத்தா் தோட்டம் திறப்பு, கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் சசிகாந்த தாஸ் தலைமை வகித்தாா். கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் பங்கேற்று கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தா் தோட்டம், புத்தா் சிலையைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, மரக்கன்றுகளை நட்டுவைத்து, கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவியை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்றிலிருந்து நாம் விடுபட முடியும் என பிரதமா் மோடி கூறி வருகிறாா். மாணவா்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

உயிா் வாழ்வதற்கு பிராணவாயு மிகவும் முக்கியம். நாம் மரம் நடுவதை சாதாரண ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்கிறோம். மரம் நடுவது, பல தலைமுறைக்கும் நாம் சோ்த்து வைக்கும் சொத்தாகும். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அனைவருக்கும் பலன் தரக்கூடிய வகையில் மரக்கன்றுகளை நடவேண்டும் என்றாா் அவா்.

விழாவில் எம்எல்ஏ-க்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜான்குமாா், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடு, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.