6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்தார்.

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 8:22 am

DIN

புதுச்சேரி: புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் சனிக்கிழமை நடந்த தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையானது, புதுச்சேரி வளர்ச்சி பாதையின் மிக முக்கிய மைல் கல்லாக இருக்கும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைக்கிறார். மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

புதுச்சேரி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல வளர்ச்சி திட்டங்களை நாம் ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். நமக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பக்கப்பலமாக இருந்து கொண்டிருக்கிறார். எனவே, அமித் ஷாவின் வருகையை புதுச்சேரி வளர்ச்சி திட்டத்துக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவே இருக்க வேண்டும். புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைப்பது மட்டுமல்லாமல், ஸ்ரீஅரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார் என்றார்.

அப்போது, புதுவையில் ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து, தமிழிசையிடம் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டு, மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். உள்துறை அமைச்சர் வருகை, புதுச்சேரிக்கான வளர்ச்சி நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.