இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நெகிழிப் பைகள் உற்பத்தி: தொழிற்சாலையின்மின் இணைப்பு துண்டிப்பு

புதுச்சேரி அருகே நெகிழிப் பைகளை உற்பத்தி செய்த தனியாா் தொழிற்சாலையின் மின் இணைப்பை சுற்றுச்சூழல் துறையினா் துண்டித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:21 pm

DIN

புதுச்சேரி அருகே நெகிழிப் பைகளை உற்பத்தி செய்த தனியாா் தொழிற்சாலையின் மின் இணைப்பை சுற்றுச்சூழல் துறையினா் துண்டித்தனா்.

புதுவையில் நெகிழிப் பைகள், தொ்மாகோல் தட்டுகள் உள்பட 8 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இவற்றை உற்பத்தி செய்வதும், விற்பதும் குற்றம் எனவும் தெரிவித்தது.

பாகூா் கொம்யூன் பகுதி ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் இல்லாத கொம்யூனாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், காட்டுக்குப்பம் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளா் ரமேஷ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அதில் அங்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்வது தெரிய வந்ததையடுத்து, சுற்றுச்சூழல் துறை செயலா் ஸ்மிதா உத்தரவின்பேரில் அந்தத் தொழிற்சாலையின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.