6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவை சாலைகளுக்கு தமிழ் பெயர் பலகைகள்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:22 am

DIN

புதுச்சேரி: புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள கவிஞரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன் , சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணகுமார் எம்பி, செல்வகணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் பாரதியார், பாரதிதாசன் இருவருக்கும் முழு மரியாதை செலுத்தப்படுகிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாரதிதாசன் எழுதியதுதான்.

Story image

பாரதிதாசன் பாடும்போது "தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை" என்று சொன்னார். அதனால் புதுச்சேரியில் எல்லாப் பெயர்  பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமையாக இருக்கும். அரசை கட்டாயப்படுத்துவதைவிட நாமாக முன்வந்து தமிழ் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்.

புதுச்சேரியில் எல்லா இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும் தமிழ் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்ற குறிப்பை தருவது குறித்து, முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். 

வீட்டில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை வைத்துப் பழகுவோம். தமிழை பாராட்டுவோம், சீராட்டுவோம். புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.