அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுவை புதிய தலைமை செயலர் ராஜுவ் வர்மா முதல்வருடன் சந்திப்பு

புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில்

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 7:10 am

DIN

புதுச்சேரி: புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தில்லிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜீவ் வர்மா புதுவை தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து புதுவை தலைமை செயலாளராக இருந்த அஸ்வனிகுமார் வெள்ளிக்கிழமை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புது தில்லி புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து புதுவை தலைமை செயலராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்று கொண்டார். 

இதனையடுத்து சனிக்கிழமை பிற்பகல் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வந்த புதிய தலைமை செயலர் ராஜீவ் வர்மா, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.