புதுச்சேரி: புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தில்லிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜீவ் வர்மா புதுவை தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து புதுவை தலைமை செயலாளராக இருந்த அஸ்வனிகுமார் வெள்ளிக்கிழமை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புது தில்லி புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து புதுவை தலைமை செயலராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்று கொண்டார்.
இதனையடுத்து சனிக்கிழமை பிற்பகல் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வந்த புதிய தலைமை செயலர் ராஜீவ் வர்மா, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


