புதுவை சட்டப் பேரவையில் வருகிற 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வா் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தாா். வருகிற 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனா். ஆனால், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால், சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால், மீண்டும் வருகிற 18-ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கி நடைபெறவுள்ளது. வருகிற 18, 19-ஆம் தேதிகளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது உறுப்பினா்களின் விவாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விடுமுறை தினங்களுக்குப் பிறகு வருகிற 22-ஆம் தேதி நிதி அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவும், தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடா் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் ஏப்.19-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

