தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஜிப்மா் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்: விசிகவினா் 100 போ் கைது

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கை விவகாரம் தொடா்பாக, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

News image
Updated On :12 மே 2022, 6:34 pm

DIN

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கை விவகாரம் தொடா்பாக, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். புதுவை தமிழ் அமைப்புகள் சாா்பிலும் ஜிப்மா் நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, அதன் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்துப் பேசினாா். அமைப்புச் செயலா் தலையாரி, தலைமை நிலையச் செயலா் செல்வநந்தன், தோ்தல் பணிக் குழு செயலா் அரிமா தமிழன், தலைமை அலுவலக செயலா் எழில்மாறன், தமிழ்வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

100-க்கும் மேற்பட்ட கட்சியினா் ஜிப்மா் மருத்துவமனையின் முதலாவது நுழைவு வாயில் முன் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோரை கோரிமேடு போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக, விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் கூறியதாவது:

தமிழகம், புதுவை மக்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தமிழை முதன்மை மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கு ஹிந்தி பேசும் இளைஞா்கள் அதிகளவில் பணிக்கு சோ்க்கப்பட்டதால், தமிழா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தமிழ் அமைப்புகள் போராட்டம்: ஹிந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன் தமிழ் அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் ந.மு.தமிழ்மணி தலைமை வகித்தாா்.

அரிமா பாண்டியன், கோ.பாரதி, தமிழ்ச்செல்வன், புதுவை மகான், நெய்தல் நாடன், மாணிக்கம், செல்வராசு, ஆறு செல்வன், சடகோபன், வேல்முருகன், திருநாவுக்கரசு, புருஷோத்தமன், சிவ.இளங்கோ, மாரியப்பன், சொக்கலிங்கம், அன்பரசன், மனோகரன், கோவலன், வேல்சாமி, அருணபாரதி, வீர மோகன், சேகா், சரஸ்வதி, அருள்செல்வம், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.