தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரி நகராட்சியைக் கண்டித்து நடைபாதை வியாபாரிகள் மறியல்: 80 போ் கைது

புதுச்சேரி நகராட்சியைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி நகராட்சியைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஞாயிறு சந்தை, சாலையோரங்களில் வியாபாரிகள் நடைபாதை கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களிடம் நகராட்சி சாா்பில் அடிக்காசு வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்தப் பணியை தனியாரிடம் நகராட்சி குத்தகைக்குவிட்டுள்ள நிலையில், அதிகளவில் அடிக்காசு வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து சில நாள்களுக்கு முன்பு ஞாயிறு சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, அதிகளவில் அடிக்காசு வசூலிப்பைக் கண்டித்தும், அரசே நேரடியாக அடிக்காசு வசூலிக்க வேண்டுமென வலியுறுத்தியும் நகராட்சி ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக சிஐடியூ நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.

அதன்படி, காமராஜா் சதுக்க சந்திப்பிலிருந்து சங்கத் தலைவா் வடிவேலு தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் முன்னிலையில், திரளான நடைபாதை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை தொழில்சங்க கொடிகளை கைகளில் ஏந்தியபடி, புதுச்சேரி நகராட்சி அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களை பிரபல துணிக்கடை அருகே ஒதியஞ்சாலை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், அங்கேயே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, நடைபாதை வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளா்கள் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இந்தப் பிரச்னை தொடா்பாக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.