புதுச்சேரி வருவாய், பேரிடா் மேலாண் துறையின் கீழ் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளா்கள் 6 பேருக்கு துணை வட்டாட்சியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அதன்படி, காரைக்கால் துணை ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளா் தீனதயாளன் காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், புதுவை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்தில் பணியாற்றிய கோமலா துணை ஆட்சியா் (வருவாய் - வடக்கு) அலுவலகத்துக்கும், சுசித்ரா காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலகத்துக்கும், கணேசன் ஏனாம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், வேல்முருகன் காரைக்கால் உதவி சட்டமுறை எடையளவுத் துறை கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கும், ஏனாம் சட்டமுறை எடையளவு துறையில் பணியாற்றிய ஜெயச்சந்திரன் வில்லியனூா் துணை ஆட்சியா் (வருவாய் - தெற்கு) அலுவலகத்துக்கும் துணை வட்டாட்சியா்களாக நியமிக்கப்பட்டனா்.