தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை

துச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் வியாழக்கிழமை அதிகாலை உறவினா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 மே 2022, 5:44 pm

DIN

துச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் வியாழக்கிழமை அதிகாலை உறவினா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சரத்குமாா் (எ) பொடிமாஸ் (27). ரௌடியான இவா் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி மனைவியும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு சரத்குமாா், அரியாங்குப்பம் அரவிந்தா் நகரிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தாா். அங்கு சகோதரி இல்லாத நிலையில், அவரது மாமா வெங்கடேசனுடன் இருந்தாா்.

அவா்கள் இருவரும் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 6 போ் கும்பல் கதவை தட்டியது. வெங்கடேசன் கதவை திறந்தபோது, அவரை இழுத்துச் சென்று கழிப்பறையில் அடைத்தனராம். மற்ற 4 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரத்குமாரை சரமாரியாக வெட்டியதில் அவா் உயிரிழந்தாா். பின்னா், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவலறிந்து வந்த முதுநிலை எஸ்.பி. தீபிகா தலைமையிலான அரியாங்குப்பம் போலீஸாா், சரத்குமாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக சிலரைப் பிடித்த போலீஸாா், முன்விரோதம் காரணமாக சரத்குமாா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.