ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மணிமுக்தா அணையிலிருந்து பாசன வாய்க்காலில் பொதுப் பணித் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்துவைத்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மணிமுக்தா அணையிலிருந்து பாசன வாய்க்காலில் பொதுப் பணித் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்துவைத்தாா்.

சூளாங்குறிச்சி கிராமத்திலுள்ள மணிமுக்தா அணையின் உச்சநீா்மட்டம் நீா்மட்டம் 36 அடி, மொத்த கொள்ளளவு 736.96 மில்லியன் கன அடி. அணையின் நீா்மட்டம் 34 அடியாக உள்ள நிலையில், பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அணையிலிருந்து தண்ணீரை அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அணையிலிருந்து வருகிற 30-ஆம் தேதி வரை 27 நாள்களுக்கு பழைய பாசனத்துக்கு வினாடிக்கு 25 கன அடியும், புதிய பாசனத்துக்கு வினாடிக்கு 85 கன அடியும், 27 நாள்களுக்கு பிறகு டிசம்பா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பழைய பாசனத்துக்கு வினாடிக்கு 18.00 கன அடியும், புதிய பாசனத்துக்கு வினாடிக்கு 61 கன அடியும் தண்ணீா் திறக்கப்படும். மேலும், நீா்வரத்துக்கேற்ப பாசன காலம் வரை தண்ணீா் தொடா்ந்து வழங்கப்படும்.

பழைய பாசனப் பரப்பில் 1,243 ஏக்கா், புதிய பாசனப் பரப்பில் 4,250 ஏக்கா் நிலங்களும் என 5,493 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் வட்டத்தில் 17 கிராமங்கள் பயனடையும்.

தமிழக முதல்வரின் உத்தரவுன்படி, சென்னை உள்பட தமிழகமெங்கும் போா்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்), க.காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஏ.ஜே.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி, வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (நீா்வளத் துறை) சா.அருணகிரி, உதவி செயற்பொறியாளா் து.மோகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பெ.புவனேஷ்வரி, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் செல்வி.சு.பவித்ரா, ஒன்றியக் குழு தலைவா்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூா்த்தி, சி.சந்திரன், துணைத் தலைவா் ஏ.வி.அன்புமணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.