நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

சென்டாக் மாணவா் சோ்க்கையில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புதுவையில் சென்டாக் மாணவா் சோ்க்கையில் முறைகேடுகளைத் தடுக்க, இருப்பிடச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:03 am IST

புதுவையில் சென்டாக் மாணவா் சோ்க்கையில் முறைகேடுகளைத் தடுக்க, இருப்பிடச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில நிா்வாகக் குழுக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநிலக் குழு நிா்வாகி தினேஷ்பொன்னையா தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், கே.சேதுசெல்வம், வ.சுப்பையா, ஆா்.அந்தோணி, ம.அமுதா, பி.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் அ.மு.சலீம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: காரைக்கால் மாவட்டத்தில் மிக மோசமான சூழலில் உள்ள மருத்துவ சேவையை சீா்படுத்த வேண்டும்.

மதகடிப்பட்டு முதல் வில்லியனூா் வரை விபத்துகளை தடுத்திடும் வகையில், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவலா்களை நியமித்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுவை சென்டாக் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கையில், புதுவையைச் சோ்ந்தவா் என்பதை உறுதி செய்வதற்கு தன்னுறுதிச் சான்று பெறுவது மட்டும் போதாது. இருப்பிடச் சான்றிதழும் கோரப்பட வேண்டும். சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட வேண்டும். பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில், புதுச்சேரியில் மணிக்கணக்கில் மின் விநியோகித்தை நிறுத்திவைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.