பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரி: பட்டப்பகலில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :31 ஜூலை 2022, 6:06 am

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 7 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் சாலமன் (வயது 24). பெயிண்டர். சாலமனுக்கும் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சாலமன் நாவற்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கும்பல் அவரை நோக்கி அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்றனர். அவர்களை கண்டதும் சாலமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை விரட்டிய அக்கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாலமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சீனியர் காவலர் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், கோரிமேடு காவல்துறை அதிகாரி பாலமுருகன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சாலமன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சாலமனுக்கும், நாவற்குளம் பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் சாலமன் உடலை பார்த்து அவரது மனைவி பிரியதர்ஷினி கதறி அழுதார். இக்கொலை தொடர்பாக ரகு உள்ளிட்ட 7 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.