புதுவையில் நாளை(டிச. 5) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுவை மற்றும் காரைக்காலில் மழை இல்லாத காரணத்தினால், நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
மிக்ஜம் புயல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காற்றுடன் மிக கன மழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மிக்ஜம் புயல்: சென்னையில் இதுவரை 5 பேர் பலி
ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.