உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கு கட்டணமுறை நிறுத்திவைப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  உயர் சிகிச்சைகளுக்கான கட்டணமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published On :

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  உயர் சிகிச்சைகளுக்கான கட்டணமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டண சிகிச்சை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜிப்மர் மருத்துவமனையில் உயர்த்தப்பட்ட உயர் சிகிச்சைகளுக்கான சேவை கட்டணம் இன்று முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Story image


ஜிப்மரில் நோயாளிகளுக்கு பல்வேறு வசதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. அரசுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நோயாளிகளுக்கு விதிமுறைப்படி வசதிகள் செய்து தரப்படுகின்றன. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடா்ந்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இலவச மருந்தகம் தவிர அம்ரித் மருந்தகம், தனியாா் மருந்தகம் ஆகியவையும் ஜிப்மரில் செயல்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கான சிகிச்சை, சேவையில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மா் நிா்வாகம் உறுதியாக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.