தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12-ம்(ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு குழுமம் சார்பில் அறிவித்துள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.