ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு நடக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி நகர திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று  புதுவை துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

News image
தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்).
Updated On :13 ஜூன் 2023, 7:25 am

DIN

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று  புதுவை துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான தனிப்பிரிவை தொடங்கி வைத்த அவர்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியார் ஆய்வு தெரியவந்துள்ளது. அது சரியா என அரசு சார்பிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். ஆனாலும் சர்க்கரை நோய் பிரிவு நோயாளிகளுக்கு டிஜே அளிக்க தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து சாதனங்களும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் லஞ்சம் ஊழல் நடைபெற்றால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இதுகுறித்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி உள்ளேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தாமதமானதால் தற்போது அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பணிகளும், திட்டங்களும் வெளிப்படையான மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நிறைவேற்றப்படுகிறது. ஆகவே ஊழல்  என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆதாரமின்றி  குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது சரியல்ல. மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்க வைப்பது குறித்த புகார்கள் உள்ளன. அந்த அறையையும் நேரில் பார்வையிட்டேன். இடபற்றாக்குறையால் அது போன்ற நிலை ஏற்படுகிறது. 

ஆகவே ரூ. 42 கோடி செலவில் புதிதாக அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டவும் ஒப்புதல் வழங்கியுள்ளேன். புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழக பகுதிகளில் இருந்து தான் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.