அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புதுவை அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாளை கம்யூனிஸ்டுகள், விசிக பேரணி ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:46 pm

Din

புதுவை மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. வெற்று அறிவிப்புகளை மட்டுமே உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் மாா்க்சிஸ்ட் இணைந்து கூட்டு இயக்கமாக வரும் 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காமராஜா் சாலையிலிருந்து பேரணி புறப்பட்டு, சட்டப்பேரவை அருகில் வந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.