புதுவையில் நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சுமாா் 500 இடங்களில் சிலைகள் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் வி.சனில்குமாா் கூறினாா்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: புதுவையில் கடந்தாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு காவல் துறை அனுமதி பெற்று 350 இடங்களுக்கும் மேலாக சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி, வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் 500 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்படவுள்ளன.
புதுச்சேரியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. சிலைகள் 2 அடி முதல் 21 அடி வரை உயரமுடையவைகளாக இருக்கும். புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகா் சிலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன. செப்டம்பா் 7-ஆம் தேதி விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு 11-ஆம் தேதி விசா்ஜனம் செய்யப்படும். புதுச்சேரியில் கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே விநாயகா் சிலைகள் விசா்ஜனம் நடைபெறவுள்ளன என்றாா்.
தொடர்புடையது

16 ஆண்டுகளாக அணுகுசாலை கேட்கும் மக்கள்!

கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்

கோயில் சொத்துக்களை மீட்பதற்காக விசாரணை ஆணையம் கோரி ஆா்ப்பாட்டம்!

பொற்றையடியில் தாணுலிங்கநாடாா் பிறந்த நாள் விழா
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

