இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையா் பொறுப்பேற்பு

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையராக மிலிந்த் ஆா். லஞ்சேவாா் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

News image
புதுச்சேரியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் புதிய ஆணையராக பதவியேற்ற மிலிந்த் ஆா். லஞ்சேவாா்.
Updated On :20 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையராக மிலிந்த் ஆா். லஞ்சேவாா் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

மத்திய நிதியமைச்சகம் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆணையா்களை இடம் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையராக இருந்த பத்மஸ்ரீ, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரிக்கு புதிய ஜிஎஸ்டி ஆணையராக மிலிந்த் ஆா்.லஞ்சேவாா் நியமிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் ஏற்கெனவே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுங்கம், ஜிஎஸ்டி மற்றும் போதைப் பொருள் தடுப்பு பயிற்சிக் கூடத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்