டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு கோப்பு திருட்டு: பெண் ஊழியா் கைது

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பணியாளா் சேவை கோப்பு திருடப்பட்ட வழக்கில், பெண் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 6:07 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பணியாளா் சேவை கோப்பு திருடப்பட்ட வழக்கில், பெண் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லே போ்ன் வீதியில் பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, நெடுஞ்சாலைப் பிரிவு அலுவலகத்தில் பணியாளா்களுக்கான சேவைப் பதிவு கோப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு திருடுபோனதாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அதே அலுவலகத்தில் வவுச்சா் ஊழியராக உள்ள சாந்தாசாகிப் வீதியைச் சோ்ந்த கண்மணி (50) சேவைப் புத்தக கோப்பைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.