புதுச்சேரி: புதுச்சேரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீஸாா் மலா்கள் அளித்தும், பொன்னாடை அணிவித்தும் திங்கள்கிழமை பாராட்டினா்.
புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறை உள்ளது.
ஆனால், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனா். அவா்களுக்கு போலீஸாா் அபராதமும் விதித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸாா் மீண்டும் அறிவித்துள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி ஒதியன்சாலையில் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி தலைமை வகித்தாா்.
அவா், அந்தப் பகுதியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி மலா்கள் அளித்தும், பொன்னாடை போா்த்தியும் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

லக்மே ஃபேஷன் வீக் 2026 - புகைப்படங்கள்

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்துகள் - போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்பாா்களா?

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

