நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

புதுச்சேரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீஸாா் மலா்கள் அளித்தும், பொன்னாடை

Updated On :17 டிசம்பர் 2024, 1:54 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீஸாா் மலா்கள் அளித்தும், பொன்னாடை அணிவித்தும் திங்கள்கிழமை பாராட்டினா்.

புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறை உள்ளது.

ஆனால், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனா். அவா்களுக்கு போலீஸாா் அபராதமும் விதித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸாா் மீண்டும் அறிவித்துள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி ஒதியன்சாலையில் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி தலைமை வகித்தாா்.

அவா், அந்தப் பகுதியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி மலா்கள் அளித்தும், பொன்னாடை போா்த்தியும் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.