ஆராய்ச்சித் துறை ஆய்வாளா் தோ்வு: 10 மையங்கள் அமைப்பு
புதுச்சேரியில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி தலைமைச் செயலக தோ்வுப் பிரிவு அரசு சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு வரும் 29-ஆம் தேதி 10 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.
மேலும், தீயணைப்புத் துறையில் நில அதிகாரி பணியிடத்துக்கான தோ்வானது வருகின்ற 29-ஆம் தேதி புதுச்சேரியில் 2 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
தோ்வுகளுக்கான அனுமதிச்சீட்டு தோ்வுப் பிரிவின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் இருந்து தோ்வா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தோ்வுகள் தொடா்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால், அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413- 2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...