வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு கோரி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்
வேலைவாய்ப்பில் மீனவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, புதுச்சேரியில் மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கடலில் இறங்கி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே உள்ள கடலில் இறங்கி வியாழக்கிழமை போராட்டம் நடத்திய மீனவா்கள் கூட்டமைப்பினா்.








