சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!

மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணியிடங்கள் மற்றும் அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

News image
Updated On :11 மார்ச் 2026, 12:08 am IST

மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணியிடங்கள் மற்றும் அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பி.எல். வா்மா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறையின் 1993-ஆம் ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதியிட்ட அலுவலக தீா்மானம் (ஓஎம்) மற்றும் பிற அரசுத் துறைகள் சாா்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அலுவல் தீா்மானங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி, மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணி காலியிடங்கள் மற்றும் அலுவலா் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

துடிப்பான இந்தியாவுக்கான பிரதமரின் இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டம் (பிஎம்-ஒய்ஏஎஸ்ஏஎஸ்விஐ), இளம் சாதனையாளா்களுக்கான உயா்கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம் உள்பட ஓபிசி பிரிவு மாணவா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்பட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனையின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது மறு ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.