அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!

மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணியிடங்கள் மற்றும் அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

News image
Updated On :10 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணியிடங்கள் மற்றும் அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பி.எல். வா்மா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறையின் 1993-ஆம் ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதியிட்ட அலுவலக தீா்மானம் (ஓஎம்) மற்றும் பிற அரசுத் துறைகள் சாா்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அலுவல் தீா்மானங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி, மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணி காலியிடங்கள் மற்றும் அலுவலா் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

துடிப்பான இந்தியாவுக்கான பிரதமரின் இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டம் (பிஎம்-ஒய்ஏஎஸ்ஏஎஸ்விஐ), இளம் சாதனையாளா்களுக்கான உயா்கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம் உள்பட ஓபிசி பிரிவு மாணவா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்பட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனையின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது மறு ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தாா்.