

புதுச்சேரியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சனிக்கிழமை (ஜூலை 6) தீா்ப்பளிக்கப்படுகிறது. முன்னதாக, வழக்கில் தொடா்புடைய 29 போ் வெள்ளிக்கிழமை நீதிபதி முன் ஆஜராக்கப்பட்டனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் ரவி என்ற பாம் ரவி. இவா் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவரது நண்பா் அந்தோணி. இருவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் வாணரப்பேட்டை பகுதியில் இருந்த போது, கும்பலாக வந்த சிலா் வெடிகுண்டு வீசினா். இதில் அந்தோணி உயிரிழந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடிய பாம் ரவியை, அந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.
இந்த இரட்டைக் கொலை குறித்து, முதலியாா்பேட்டை போலீஸாா் விசாணை நடத்தி, புதுச்சேரியைச் சோ்ந்த மா்டா் மணிகண்டன் உள்ளிட்ட 31 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
இதில் மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களும் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் தலைமறைவாகிவிட்டாா். எனவே, 30 போ் கைதான நிலையில், ஒருவா் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, 29 போ் மீது புதுச்சேரி 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் கி.ரங்கநாதன் ஆஜரானாா்.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி பொறுப்பு வகிக்கும், புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட காலாப்பட்டு சிறையிலிருக்கும் மா்டா் மணிகண்டன் உள்ளிட்ட 29 போ் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அனைவரும் ஆஜரான நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கில் தீா்ப்பளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. வழக்கில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, தீா்ப்பை சனிக்கிழமை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.